மழலைகள் இதழ் 15

அண்ணாமலையான் - செபரா திருவண்ணாமலையே சிவலிங்க உருவாக இருக்கையில், இங்கு 1000க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் புதைந்து கிடக்கின்றன. ஊரில் கல்லை நட்டால் அது சிவலிங்கம் என வணங்கும் மனமுடையவராக மக்கள் இருக்கிறார்கள். வானுயர உயர்ந்து நிற்கும் மரங்கள், இது தேவலோகம் என உரைப்பது போலத் தோன்றுகிறது

குருவருள் - அசலம் “இவர் என்ன சாமியார், பார்ப்போம், போய் வருவோம், பேசுவோம் என்று தட்டிக்கழிக்கிறார். அவரிடம் பேசிப் பிரயோசனமில்லை. சில பேர்களுக்கும் உதவுகிறார், எல்லோருக்கும் சமமாக அருள் புரியவில்லை, நாம் போவோம்”

பொன்னெறிகள் பொலியும் புறநானூறு - முத்து. இராமமூர்த்தி தமிழ் மொழி, என்றிவள் பிறந்தாள் என்றுலகறியா ஏற்றம் கொண்ட இனிய மொழி, உயர் தனிச் செம்மொழி. மொழிக்கு மட்டுமின்றி அம்மொழியைப் பேசும் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி, வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி, முச்சங்கங்கள் கண்ட முதிர்ச்சியான மொழி.

ஸ்ரீ கணேச பஞ்சரத்தினம் - புலவர் நீல பகவன் விளங்கு விசையன் போன்றோர்தம் வில்லின் ஆற்றல் விரிவு பெறக் களத்திற் காட்டுந் திறனுக்கே காரணனான கணபதியே! அளக்க லாகா மதநீரை அருவியாக நிதம் பொழிந்தே களகம் ஊர்ந்த கணபதியே! களிக்கும் நெஞ்சிற் கதிபதியே!

பிரதாபன் கதை - வெற்றிவளவன் அப்போது நீலகண்டனும் குதிரையில் விரட்டிக் கொண்டு வந்தான். அவன் முன்னால் வந்து மறித்த போது வண்டிக்குதிரைகள் நிற்காமல் அவனை நோக்கிப் பாய்ந்து வேகமாகப் போயின.

Adi sankara - akr ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

Balaji - akr திருப்பதி மலை வாழும் வெங்கடேசா

நினைவில் நின்றவை - இணையப் பாட்டி, சீனு தாத்தா புகலூர் காவிரிக்கரையின் கிழக்கு திசையில் பார்த்தால் தூரத்தில் வலதிசையாகத் திரும்பிக்கொண்டிருக்கும் காவிரியின் அக்கரையில் இரு மலைகள் தெரியும். முதலில் தெரிவதைக் கொள்ளி மலை

பெருமை வாய்ந்த பிள்ளையார்! - பகுதி 6 - கீதா சாம்பசிவம் விநாயகரை வழிபடுவதால் எல்லா வினைகளும் வேரோடு அறுக்கப் படுகின்றன. கணங்கள் அனைத்துக்கும் அதிபதியான விநாயகர் வழிபாடு எப்படிச் செய்ய வேண்டும் தெரியுமா?

சுதந்திர தினம் - இணையப் பாட்டி திருப்பூரில் உதித்த சூரியனே அறப்போராட்டத் தலைவனே, தேசத்திற்குக் கொடுத்தாய் உயிரோட்டம் கலந்து கொண்டாய் மரியல் போராட்டம்

சிந்துக்குத் தந்தை - கைலாசபதி புதுமையான கருத்துக்களை வசனமாக எழுத முனைந்த அறிஞர் பலர் தமிழ்க் கவிதை எழுதிய போதிலும் பல்லுடைக்கும் கடின நடையிலே மரபு வழிவந்த பாடல்களையே பாடினர். அதுவரை எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்துவந்த வசனத்தை இவர்கள் தன்னம்பிக்கையுடன் கையாண்டனர்; அதன் எஜமானராயினர்.

நூல் நயம் - ஆகிரா சிந்தனை வளமும், வந்தனை நலமும், கந்தனை மறவாக் காட்சியும், மாந்தனன் விழையும் மாண்பும், சந்தத் தமிழின் முழக்கும், சிந்தெனச் சிந்தையை ஈர்க்கும் இசையுள்ளமும் கொண்டவர் புல்வர் நீல பகவன்.

பாலாஜி - இணையப் பாட்டி காவடி போல் தோளில் இரு பக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து விட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரை பொடி நடைதான்.

சின்னப் பையா! - என்.வி. சுப்பராமன் வள்ளுவரும் வள்ளலாரும் பிறந்த நாடிது தெள்ளுதமிழ் இலக்கியங்கள் மலர்ந்த நாடிது! ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்த நாடிது பாரதியும் வால்மீகியும் வளர்ந்த நாடிது!

வாழ்க்கை தத்துவம் - அத்தியாயம் 1 - அசலம் “பஜ கோவிந்தம்” என்ற திவ்ய காவ்யத்தைப்போல ரொம்பவும் சுலபமாகப் பின்பற்றக்கூடிய சான்றிதழ் வெறுண்டோ? ஆத்மபோதம், பகவத்கீதை போன்ற நூல்களில் தந்துள்ள வாழ்க்கையின் நியதியை, வாழ்க்கை முறையை, வாழ்வின் தத்துவத்தை மிகத் தெளிவாகவும், நளினமாகவும் இதில் தந்துள்ளார்.

பகவத் கீதா சாரம் - அசலம் குழுமியிருக்கும் பந்துக்களின் விபரத்தைக் கூறி, இத்துனை பந்துக்கள் கொண்ட ஸேனையில் எவ்வளவு பேர் மடிவார்கள், பிறகு கிடைக்கும் ஜயத்தில், ராஜ்யத்தில், ஸுகத்தில் என்ன பலன் என்று வாதாடுகிறான். மனோதைரியம் போய், பிரமை பிடித்த அர்ஜுனன் தன் கடமையிலிருந்து நழுவப் பார்க்கிறான்.

விடுதலை! - புலவர் நீல. பகவன் இறுக்கங்கொண்ட வெள்ளையர்கள் இரக்கம் கொள்ளை வில்லையடா! நொறுக்க வேண்டும் தலையெனவே
நோக வைத்தார் நிலைகுலைய

வாழும் முறைமை - கடிதம் 4 - அசலம் சுபாவ வளர்ச்சிக்கு முக்கியமாக வேண்டியது போற்றக்கூடிய குணங்கள். அதாவது “சாந்தம், ஸமாதானம், பொறுமை, தன்னம்பிக்கை, தைர்யம், ச்ரத்தை, கடமை உணர்ச்சி, விடாமுயற்சி, மனோ நியந்தரணம், ஸூக்ஷ்ம புத்தி, பாசம், வினயம், அன்பு, பக்தி, தயை, கருணை, ஒற்றுமை உணர்ச்சி, பரோபகாரக் கொள்கை, ஸாமுதாயிக மனப் பான்மை, தன்னலமற்ற சுபாவம், வாழ்வின் லக்ஷியம்” எனப்படும். என்ன? இவைகளைக் கேட்டதும் மலைப்பாக இருக்கிறதா?

எண்ணிப் பாருங்கள்! - என்.வி.சுப்பராமன் அவசரமாகப் பள்ளிக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருக்கிறீர்கள். எதிரில் வரும் பையன் சைக்கிளிலிருந்து விழுந்து விடுகிறான். என்ன செய்வீர்கள்? எண்ணிப் பாருங்கள்.

Park - Sarika Little angel having a good time standing in the park All by herself singing like a skylark, It is not yet dark !

வீரப் பெண்மணி - இணையப் பாட்டி 1907ல் நடந்த ஒரு சம்பவம், இந்திய சோஷலிசக் கூட்டம் ஜெர்மனியில் ஸ்டூவர்ட் என்ற இடத்தில் நட்ந்து கொண்டிருந்தது. திடிரென்று ஒரு பெண்மணி கையில் நம் நாட்டு தேசியக் கொடியுடன் வீரமாக நடந்து அந்த இடத்தில் இந்தியத் தேசியக் கொடியைப் பறக்க விட்டார்.

காஞ்சி மாநகர் வரலாறு - புலவர் த.கு. பத்மநாபன் சைவம், வைணவம், சமணம், சாக்கியம் போன்ற சமயங்கள் காஞ்சி மாநகரைக் கண்டிருக்கின்றன. தெய்வநலம் மணக்கும் திருநகரம் காஞ்சி மாநகரமாகும். திரும்பிய பக்கமெல்லாம் கோவில்களும் கோட்டங்களும் நிறைந்துள்ள இந்நகரில் கச்சி ஏகம்பனே! என்றும், காஞ்சி வரதப்பா! என்றும் வணங்கி நிற்போர் பலர்.

முத்தமிழ் முத்து - ஆகிரா கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சிந்தனையாளர், நிகழ்ச்சிகள் மற்றும் விழா அமைப்பாளர்
<br>கவியரங்கம், பட்டிமன்றம், வழக்குரை மன்றம், உரையரங்கம் முதலிய நிகழ்ச்சிகளில் (தலைமை, நடுவர் பணிகள் உட்பட) பங்கேற்பாளர்.

தந்தை காந்தி! - புலவர் நீல. பகவன் யந்திரம்போல் ராட்டையை இயக்கி நின்ற காந்தியாம்! இந்தியாவின் விடுதலை இசைத்துத் தந்த காந்தியாம்

Artist sisters - akr YOUR BLESSINGS FOR THESE KIDS

Seashore - Sarika I live in a house facing the seashore And enjoy life that is nature's gift The colorful land that lie beside And birds that fly by the seashore!

பஞ்ச முக ஆஞ்சனேயர் - மழலைகள் குழுவினர் ஆஞ்சநேயரைப் பற்றிய சுதர்சன சம்ஹிதை என்ற நூலில் பஞ்சமுகி ஹனுமானைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது, கோவில் கர்பக் கிரஹத்தில் இன்னொரு ஆஞ்சநேயர் நிற்கிறார், ஒரு கையில் கதையுடன் வீர ஆஞ்சநேயராக்க் காட்சி தருகிறார். இவைகளெல்லாம் பார்த்தால் மனதிற்கு சாந்தி ஏற்படுகிறது.

மழலைகள்.காம் இதழ் १४, ஜூலை 2007

மழலைகள்.காம்



குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், புகைப்படங்கள், கதைகள், கவிதைகள், பாடல்கள், இசை, பொது அறிவு, க்விஸ், புதிர்கள், போட்டிகள், கணினியில் தமிழ் படைக்கும் வழிகாட்டி, கட்டுரைகள், ஆன்மீகம்


Dear friends,



Mazhalaigal.com 14th issue is on the net. Glimpses of the articles, poems, stories, artwork and various other contents of the site have been described briefly below with relevant links to the respective pages.


We seek your continued support to promote this venture targeted at improving the talents of Children in all walks of life while providing fruitful entertainment not only to children but also to elders.


Thank you,


A.K. Rajagopalan

Editor


Tamil Literary work on Thiruvannamalai அண்ணாமலையான் - செபரா


அசையாத ஒன்றாகி, அசலமாய் நின்ற ஈசன் அடியார்க்கருள இசைந்தான் எழுந்தருள்வான்; இக்கோயில் நிற்குமந்த திசை நோக்கிக் கைதொழு, திருவருள் செய் அண்ணாமலையென இசைந்திங்கே தொழுகுவையே இனிதிங்கென் மனமே!!


Tamil poem on nature எல்லோருக்கும் இனியதே! - என்.வி. சுப்பராமன்


அடர்த்தியான காட்டிலே சிங்கம் புலி வாழுது பச்சை வயல் காட்டிலே புள்ளி மானும் துள்ளுது


Article on Lord Ganapathy பெருமை வாய்ந்த பிள்ளையார்! - கீதா சாம்பசிவம்


தீச் செயல்கள் புரிபவர்கள் யாரும் விநாயகரை வணங்கி விட்டு ஆரம்பிக்க மாட்டார்கள். அப்படியே ஆரம்பித்தாலும் ஏதேனும் இடையூறு வரும்.


Story of Tamil poet kalamegam கவி காளமேகம் - akr


காளிதேவியின் அருளால் கவிபாடும் திறம்பெற்றுத் தமிழிலே கவி மழை பொழிந்த மாபெரும் கவி காளமேகம் ஆவார். இவரது இயற்பெயர் வரதன் என்பதாகும்.


பாவேந்தர் - இணையப் பாட்டி


இவர் தாய், தந்தை இட்ட பெயர் கனக சுப்பரத்னம், ஆனால் அவர் பாரதியார் மேல் அளவில்லா அன்பு கொண்டு தன் பெயரை பாரதி தாசன் என்று ஆக்கிக் கொண்டார்.


Letter on philosophy of life வாழும் முறைமை - அசலம்


நீங்கள் படிப்பதோடு நில்லாமல் ஸஹபாடிகளுக்கு உதவியாகவும் ‏இருக்க வேண்டும். நாம் படித்ததை மற்றவர்க்குக் கற்றுக்கொடுத்தால் நமக்கு இ‏ரட்டிப்புப் பலன் கிடைக்கும். ஏனெ‎னில் அதுவே ஒரு Revision ஆக அமையும்.


Values and Rules of human life ஞானத்துளிகள் - பார்வமணி


ஏழ்மையிலும் நேர்மை, கோபத்திலும் பொறுமை, தோல்வியிலும் விடாமுயற்சி, தரித்திரத்திலும் பரோபகாரம்


தாமஸ் ஆல்வா எடிசன் - பார்வமணி


Telephonic Telegraphs 1877, Telephonic or Electro-Harmonic Telegraphs, Phonographs or Speaking Machines 1878, Acoustic Telegraphs 1878, Automatic Telegraph Perforator and Transmitter 1879


Artwork comparison with scanned image Fort - Artist: S. Dinesh


கோட்டை கொத்தளம் பாருங்க - நமது நாட்டின் பெருமை பாடுங்க!


Article on philosophy of life வாழ்வின் ரகசியம் - அசலம்


கர்மபலனை எதிர்பார்க்காது செயல்படுவது வாஸனா க்ஷயத்திற்கு வழிவகுக்கும். அதாவது புது வாஸனா சக்தி எழாமல் இருக்கவும் மிஞ்சியிருக்கும் வாஸனா சக்தி அழிந்து விட உதவியாக அமையவும் ஹேதுவாக இருப்பது இந்தத் தன்னலமற்ற, பல்னை எதிர்பார்க்காது செய்யும் கர்மாதான்


A letter from a little US born Idian girl Letter to friends abroad - Pooja


I am Pooja Iyer again. Hope you all remember my first letter about my first India trip. It is yet to complete. After sending you that letter I had my exams and my summer holidays started only by the end of May. So I was too busy in reviewing my lessons once again. Here comes some news about our schools.


Tamil article on saint Tyagaraja src="http://www.mazhalaigal.com/images/inserts/mgl0709/tn0709_tirumala.jpg" border=0> பாலாஜி - இணையப் பாட்டி


ஸ்ரீ தியாகபிரும்மம் பல்லக்கில் கிளம்பினார். போகும் வழியெல்லாம் ஒரே காடுதான், குரங்குகளும் அதிகம் உண்டு. பல்லக்கை அவரது சீடர்கள் தூக்கிச் சென்றனர். காலை திருப்பதியை அடைந்து, பெருமாள் தரிசனத்திற்காக வெகு நேரம் நின்றனர்.


பாபாஜி - இணையப் பாட்டி


அவர் பாலாஜியிடம், "அப்பா ந்ண்பா, இன்று என்னுடன் தாயம் விளையாட வாயேன், உன்னுடன் விளையாட ஆசையாய் இருக்கிறது, நீ எதிரில் வரவில்லை என்றாலும் நீயும் விளையாடுவதுப் போல் எண்ணி நான் விளையாடுகிறேன் என்று தாயக்க்ட்டை உருட்டலானார். திடீரென்று ஒரு குரல் கேட்டது, நண்பா பக்தா, நான் இதோ விளையாட வந்துவிட்டேன்


Artwork by mazalais kid Brothers - Artist: V.Aishwarya


கஷ்டம் தீர்க்கும் கணபதியும்
குற்றம் களையும் குமரனும்


எந்தையும் தாயும் - ஆகிரா


வீடு கட்டும் பணியில் பணியாட்களுடன் சேர்ந்து நானும் என்னால் இயன்ற பணிகளைச் செய்ததால் வீடு கட்டும் கலையில் எனக்கு ஓரளவு அறிவு ஏற்பட்டது. விரைவிலேயே வீடு கட்டும் பணி நிறைவுற்றது. அதில் உல்லாசமாய்ப் பொழுதைக் கழிக்க ஊஞ்சலொன்றை அமைத்தார் என் தந்தை.


Artwork by mazalais kid Gnanappazam - Artist: A.R. Ayshwarya


பெற்றோரை வலம் வந்து - ஞானப் பழம் பெற்ற விநாயகனே, வினை தீர்ப்பவனே!


Artwork by mazalais kid Vairamuthu - Artist: V.Aishwarya


வைரமுத்துப் பெருந்த'கை' வைரமும், முத்தும் வடிக்கும் 'கை'!


The essence of Bagavatgita பகவத் கீதா சாரம் - அசலம்


ஒரு மஹாவீரனுக்கு உகந்த கம்பீரத்துடன் அர்ஜுனன் தன் தேரோட்டியான ஸ்ரீ கிருஷ்ணனைப் பார்த்துப் போர்வீரனின் அதிகார தோரணையில் சொல்வது தெரிகிறது. ஸ்ரீ கிருஷ்ணன் தமது ஸகா என்றோ, பகவான் என்றோ தோரணை அர்ஜுனனுக்கு இப்பொழுது இருப்பதாகத் தெரியவில்லை.


Flowers


Flowers of numerous colors In same pot, It is marvelous !


Artwork comparison with scanned image Elephant & The blind - Artist: A.R. Ayshwarya


Neither this, nor that
Elephant is an elephant!


Pencil sketch by mazalais kid Sairam - Artist: V. Vrishin Vigneshwar


Shirdi Baba - the Saviour Lives, guides, protects and saves!


Article on Parenting பெற்றோரியல் அறிமுகம்-ஆகிரா


ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் அக்குழந்தை தனது வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று, உலகிலுள்ள மற்ற அனைவருடனும் அன்புடனும் நட்புடனும் நல்வாழ்வு வாழ ஆவன செய்ய வேண்டும். அது அவர்களது இன்றியமையாத கடமை.


Story of Prataba mudaliar sariththiram பிரதாபன் கதை - வெற்றிவளவன்


தன் முகத்தை அழகாகக் காட்டாதது முகம் காட்டும் கண்ணாடியின் தவறு என்று கண்ணாடியை உடைத்த அசட்டுத் தனமும் பிரதாபனுக்கு உண்டு. எந்த வேலையையும் உடனே செய்து விட வேண்டும் என்ற தாயாரின் புத்திமதியைப் பலகாரங்கள் சாப்பிடுவதில் பயன்படுத்தி ஏளாளமாக பண்டங்கள் உண்டு வயிற்றுக்கோளாறுக்கு வைத்தியர்களுக்கு வேலை கொடுப்பது பிரதாபனின் வழக்கம்.


Article on Mahakavi Bharathiar சிந்துக்குத் தந்தை - கைலாசபதி


பாரதியின் புதுமைப்பண்பின் ஆழத்தையும், இயல்பையும் அறிந்துகொள்ளுவதற்கு அவனது சகபாடிகளையும் முன்னோடிகளையும் சேர்த்துத் தெரிந்து கொள்ளல் அத்தியாவசியம்.

மழலைகள்.காம் இதழ் 13 ஜூன் 2007

மழலைகள்.காம்



குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், புகைப்படங்கள், கதைகள், கவிதைகள், பாடல்கள், இசை, பொது அறிவு, க்விஸ், புதிர்கள், போட்டிகள், கணினியில் தமிழ் படைக்கும் வழிகாட்டி, கட்டுரைகள், ஆன்மீகம்


Dear friends,



This is the second newsletter of mazhalaigal.com which has reached its 13th issue and is becoming more and more popular day by day. Glimpses of the articles, poems, stories, artwork and various other contents of the site have been described briefly below with relevant links to the respective pages.


We seek your continued support to promote this venture targeted at improving the talents of Children in all walks of life while providing fruitful entertainment not only to children but also to elders.


Thank you,


A.K. Rajagopalan

Editor


காஞ்சிக் குயில் - ஆகிரா


மழலைப்பருவ முதலே தமிழிசையில் மிகுந்த ஆர்வம் கொண்டு சிறகடித்துப் பறக்கும் சுபாஷிணி எனும் பெயர்கொண்ட இவ்விசைக்குயில் பல மேடைகளைக் கண்டுள்ளது. அத்துடன் இசை உலகின் பல பிரபலங்களுடன் கலந்து பழகி அவர்களது பாராட்டையும் பெற்றுள்ளது.


பிரதாபன் கதை - வெற்றிவளவன்


"பிரதி பலன் எதிர்பார்த்து நான் இதைச் செய்யவில்லை. ஆபத்தில் உதவுவது புண்ணிய காரியம். அந்தப் புண்ணிய பலன் எனக்கு சொர்க்கத்தைத் தரும்" - "இறந்த பிறகு கிடைக்கும் சொர்க்கம் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் உங்களுக்குக் கடவுள் அருள் தருவார்"


மின் அஞ்சல் சின்னம் @ பிறந்த கதை - பார்வமணி


அதிகமான பாஷைகளில், இந்த சின்னம், பலதரப்பட்ட உருவகம், பொதுப்படையாக, பிராணிகளுக்கு ஒப்பிட்ப்படுகிறது. ஜெர்மானியர், ஃபின்ஸ், ஹங்கேரியன், போல்ஸ், தெற்கு ஆப்பிரிக்கர்கள், இந்தச் சின்னத்தைக் குரங்க்கின் வாலாகப் பார்க்கிறர்கள். மற்றும் சிலர் நத்தைக்கு ஒப்பிடுகிறார்கள். இப்படியாகப் பலவிதம்.


அண்ணாமலையான் திருப்புகழ் பாகம் 1 - செபரா


இறைவன் கருணாமூர்த்தி என்பதால், நான் வேண்டாத பொழுதும், எனக்கென்ன வேண்டுமோ அதனைத் தானாகத் தருவான் என்பதால், அவன் புகழைப் பாடுகிறேன். நீரின் இயல்பு, பள்ளத்தை நோக்கிப் பாய்வதுதானே


கணினி பிறந்த கதைகேளு! - என்.வி. சுப்பராமன்


எண்ணும் எழுத்தும் கண்ணெனவே அன்றே சொன்னான் வள்ளுவனும் விண்ணையும் காணப் பயன்படுமே கணினி என்னும் கருவியது!


விநாயகர் உருவ ரஹஸ்யம் - கீதா சாம்பசிவம்


யானை முகம், ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆறு எழுத்துக்கள் உள்ளவர். விநாயகர் என்பது ஆறு எழுத்து இல்லையா? இவரை வழிபடுவோர் ஏழு பிறவிகளில் இருந்தும் விடுபட்டு, எட்டுத் திசைகளும் புகழ, ஒன்பது மணிகளும் பெற்று சம்"பத்து"க்களுடன் வாழ்வார்கள்.


Flat Stanley from USA interviews mazalais kids on Kanchee


There are a large number of temples with plenty of sculptures and artwork in and around Kancheepuram. There are 108 temples exclusively for Lord Shiva out of these.


தாமஸ் ஆல்வா எடிசன் - பார்வமணி


இவர் மிக சிறந்த விஞ்ஞானி. இவருடைய கண்டுப்பிடுப்புகள் ஆயிரத்திற்கும் மேல். இவர், ஏழு குழைந்தைகளுள் கடைக்குட்டி.


விஞ்ஞான எழுத்தாளர் - akr


கணினி வந்த பிறகு ப்ரௌசிங் செய்து, பல விஷயங்களை அறிந்து, நான் அறிந்ததை மற்றவர்களுடன் மின் அஞ்சல் மூலமும், ஏனைய இணையதளக் குழுமங்கள் மூலமும் பகிர்ந்து கொள்வதுதான் இப்பொழுதைய பொழுதுபோக்கு.


ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பொன் மொழிகள்


கொடுத்து மகிழ் - Give and Rejoice, கோபம் கூடாது - Avoid Anger, சச்சரவு தவிர் - Avoid quarell, சத்சங்கம் தேடு - Seek Holy company, சிவனே சங்கரர் - Sankara is Siva only


புதையல் பெட்டகம் - அத்தியாயம் 5 - எஸ்.வி.என்


பிரளய காலத்தில் மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்ததாக இந்துப் புராணங்கள் சொல்கின்றன. நோவா என்னும் மனிதன் கடவுளின் ஆணைப் படி ஒரு பெரிய கப்பலைக் கட்டி அதில் எல்லா வித உயிரினங்களின் ஒவ்வொரு ஜோடியை ஏற்றிச் சென்றதாகப் பழைய ஏற்பாட்டிலும் யூத மதத்திலும் சொலப்படுகிறது. இன்று இல்லாமலே அழிந்து போன கிரேக்க மதம் தன்னுடைய கதைகளில் பிரளய காலத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.


Funny Duck - artwork


என்னைப் பாத்தியா என்தலையைப் பாத்தியா!


Little Angela - Artwork


Oh my little child Anjela, what ails thee?
Wipe off your tears and bring back thy cheers !


சிவபக்தர் ஹரதத்தார் - இணையப் பாட்டி


ஸ்ரீ மகாவிஷ்ணு கஞ்சனூரில் தனது 15 அவதாரங்களுள் ஒன்றான ஸுதர்சனாவதாரமாக வாஸுதேவருக்குப் புத்ரராக அவதரிக்க, அவருக்கு சுதர்சனர் என்ற பெயர் வைத்தனர். ஆனால் ஹரதத்தர் என்று கூப்பிட்டனர்.


அன்னைக்கு வந்தனம் - தாத்தா சீனு


தெய்வத்திரு ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகம் எனது ஞாபகத்திற்கு வந்ததால், அந்தக் கண்களில் நீர் பெருக வைக்கும் சுலோகங்களை பரமாசாரியார்களின் (காஞ்சி மாமுனிவர்) விளக்கங்களுடன் சமர்ப்பிக்கின்றேன்.


Umbrella Friends - Artwork


இருவரும் ஒரு குடையில் ! அனைவரும் ஒரு நிழலில் !!


களிமண் - ஆகிரா


கோவில் கம்பீரமாக வானை அளாவி நின்றது. கோவிலின் கோபுரம் கிராமத்தின் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியும் வண்ணம் போதிய உயரத்தில் அமைக்கப்பட்டிருந்ததுடன் வண்ணமயமான சுதை வேலைப்பாட்டு முறையில் வடிக்கப்பட்ட சிற்பங்களுடன் கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது. கரகாட்டம், கச்சேரி, வாண வேடிக்கைகள் என்று ஊரே அமளிதுமளிப்பட்டது.


பசுமரத்தாணி - சீனு தாத்தா


பத்து வயதிலிருந்து பதினாறு இன்னம் சொல்லப் போனால் பதினெட்டு வயதைத் தாண்டும் வரை மிகப் பல துராசைகள், தீய பழக்க வழக்கங்கள் உன்னை மயக்கி, கவர்ச்சி செய்யத் தொடங்கி, விரைவில் உன்னை அவைகளில் ஈடுபட வைக்கும் வாய்ப்புக்கள் இருந்து கொண்டே இருக்கும். வளரும் சிறுவர் சிறுமியர்களின் இந்த ஆறெட்டு வருட கால கட்டத்தை ஆங்கிலத்தில் 'Dangerous Years' அதாவது 'ஆபத்தான, இடருடைய அல்லது பாதுகாப்பற்ற வருடங்கள்' எனக்கூறுவார்கள்.


கண்ணே கலைமானே - இணையப் பாட்டி


நம் பெரியவர்கள் நமக்கு எப்போதும் நன்மைக்காகவே சில அறிவுரைகள் வழங்குவார்கள் அதுவும் தாய் என்றால் கேட்கவே வேண்டாம், எப்போதும் குழந்தைகளின் நலத்தையே சிந்திப்பாள். இது பற்றி ஒரு கலைமானின் கதை சொல்கிறேன்.


செவிலி நைட்டிங்கேல் - சீனு தாத்தா


என்றுமே உலகம் மறக்காத ஃப்ளாரென்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினம் மே 12. அகில உலகத்திலும் அந்த தினத்தை (Nurse's Day) "செவிலியர்" தினமாகக் கொண்டாடுகிறார்கள்.


Magician - Artist: M. Deepshi


ஜீ.. பூம்.. பா.. ! மயக்கிடுவேன் என் மாய வித்தையில்


மே தினத்தின் வரலாறு - பார்வமணி


ஆதிகால Celts and Saxons நெருப்பின் தினமாக (the day of fire) மே 1ஆம் தேதியைக் கொண்டாடினார்கள். Saxons ஏப்ரல் 30 சாயந்திரம் விழாவைத் துவக்குவர். விளையாட்டு, கேளிக்கைகள், விருந்துடன் கூடிய விழா பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலத்தை வரவேற்பதற்காகக் கொண்டாடப்படுவது.


US presidents - akr


Test your general knowledge - Take a quiz


ஆலயம் என்பது வீடானால்? - முரளி


இந்த நான்கு பணியாளர்களும் தினமும் காலையில் 6 மணிக்கு வேலையைத் துவங்கி இரவு 9 அல்லது 10 மணி வரை வேலை செய்தார்கள். அவர்கள் வார இறுதி விடுப்பேதும் எடுக்கவில்லை. பணியை முடித்துவிட்டு வீடு திரும்பவே விரும்பினர்.

மழலைகள்.காம்



குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், புகைப்படங்கள், கதைகள், கவிதைகள், பாடல்கள், இசை, பொது அறிவு, க்விஸ், புதிர்கள், போட்டிகள், கணினியில் தமிழ் படைக்கும் வழிகாட்டி, கட்டுரைகள், ஆன்மீகம்.

Dear friends,

Now you are seeing the first newsletter of mazhalaigal.com which has reached its 12th fortnightly issue crossing all initial stage difficulties and is becoming more and more popular day by day. Glimpses of the articles, poems, stories, artwork and
various other contents of the site have been described briefly below with relevant links to the respective pages.

We seek your continued support to promote this venture targeted at improving the talents of Children in all walks of life while providing fruitful entertainment not only to children but also to elders.

Thank you,

A.K. Rajagopalan
Editor


Letter from a little US born Indian girl seeking your help

I am sending my friend Flat stanley to you. Flat stanley is a school project that I am doing for my social science class. I want him to visit you so that you can tell him all about the place you live and your culture and custom. - Sarika


ஸ்பாம் எனும் சாபக்கேடு - 5 - செபரா

ஒவ்வொரு முறையும் இணைய தளத்திற்குச் சென்று, உங்கள் செயல் முடிந்து கணிணியின் தொடர்பறுக்குமுன் அல்லது வேறு செயலினை ஆரம்பிக்கு முன், உங்கள் கணிணியில், “குக்கீஸ்” (COOKIES), நீங்கள் சென்று வந்த தள விவரங்கள் (HISTORY) மற்றும் அதன் மூலம் உருவான கோப்புகளை (FILES) முழுமையாக அழித்து விடுங்கள். பிறகே கணிணியின் செயல்பாட்டை
நிறுத்த வேண்டும்.


திருக்குறள் படிக்கணும் - என்.வி. சுப்பராமன்

'கல்வி'தன்னைப் படிக்கணும் கசடறவே கற்கணும் கற்றபடி நிற்கணும் கருணையோடு வாழணும்!


எமலோகத்தின் ஆடிட்டர் - இணையப் பாட்டி

இந்தச் சித்திரபுத்திரன் சித்திரை மாதம் சித்திரா நட்சத்திரத்தில் பிறந்தார். அவர் சூரியனைப் போல் அறிவிலும் தேஜஸிலும் சிறந்து விளங்கினார். முதலில் அவர் பிரும்மாவின் ஆக்கத் தொழிலையே செய்யத் தொடங்கினார்.


நியாமான எதிர்பார்ப்புகள் - என். சுரேஷ்

அழகிய குழந்தையின் புன்னகை தேடும் பாச ஸ்பரிசமும்;
கலைஞர்களின் உழைப்பு தேடும் கரகோஷமும்


கணித மேதை ராமானுஜம் - பார்வமணி

ஸ்ரீ ஸ்ரீநிவாச ராமனுஜன் தானே தனக்குக் கற்பித்துகொண்ட வியப்பிற்குறிய திறமை பெற்ற ஒரு கணித மேதை. இவர் மிக எளியவர். அவருடைய தேவைகளும் மிகக் குறைந்தவை. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சன்னதித் தெருவில் வாழ்ந்தார்.


அழகனின் ஆனந்தக் கும்மி!! - செபரா

இன்னரும் தமிழினில் இனியதோர் பண்ணதில் மன்னவன் பெயர் சொல்லிக் கும்மியடி!! என்னவன் இளையனை இனிய தமிழ் காக்கும் இறைவனை எண்ணியேக் கும்மியடி!!


புதையல் பெட்டகம் - அத்தியாயம் 4 - எஸ்.வி.என்

ஒவ்வோரு கடவுளர்களும் தங்கள் பரிசாக ஒவ்வொன்றை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தனர். அவளைத் தங்கம் வெள்ளி நகைகளால் அலங்கரித்து அழகு படுத்தினர். அந்தப் பெண்ணுக்கு பண்டோரா என்று பெயரிட்டனர்.


Santhosh and Flat Stanley - photo- artwork merger

East and the West Meet with great zest Leads to the Builds a fond nest! - A phtograph artwork merger


பெருமை வாய்ந்த பிள்ளையார்! - பகுதி 3 - கீதா சாம்பசிவம்

விநாயகரே முழு முதல் கடவுள். இந்த உலகை மட்டுமல்லாது மும்மூர்த்திகளையும் படைத்து அவர்களுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தொழில்களைச் செய்யுமாறு கட்டளை இட்டவரும் விநாயகரே ஆவார்.


ஞானத்துளிகள் - என். சுரேஷ்

பாட்டி இறந்த செய்தி போதகருக்கு ஏனோ வரவில்லை. பல நாள் கழித்துப் பாட்டியின் இறப்புச் செய்தியை போதகர் அறிந்ததும் கண்கலங்கினார். சில மாதங்கள் கழித்து அன்று பாட்டி தந்த கவரைப் பிரித்துப் பார்த்தார்.


இன்று டீச்சர் லீவு .. - இணையப் பாட்டி

ஆசிரியை லீவு எடுத்து வகுப்புக்கு வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? அன்று உங்களுக்குக் கூடுதலாகச் சுதந்திரம் கிடைத்து உங்கள் கைவரிசைகளைக் காட்டுவீர்கள் இல்லையா?


மேகமே மேகமே - என். சுரேஷ்

கோபத்தாலென் இமைகளை இழுத்து மூடின கண்கள்
என் மனத்திரையில் ஆஸ்திரேலியக் காடுகள் எரிந்துகொண்டிருக்கின்றன...


Peacock - Artwork - Artist: S. Manikandan

இயற்கை கொடுத்த இவ்வண்ணம் இறைவன் கொடுத்த மாவரமே


Ram and Hanuman - Artwork - Artist: V. Vrishin Vigneshwar

ஆஞ்சனேயன்: கோசலை புத்திரா உன்னை வணங்குகிறேன் ஸ்ரீராமன்: வாயுபுத்ரா உன்னை வாழ்த்துகிறேன்


பொறுப்பு - சுகந்தி

“ஆமாம்மா கல்பனா, அவளைப் போய்க் கூட்டிட்டு வரணும்ன்னு ஆசையா இருக்கு, ஆனால் என் தோட்டத்தை விட்டுட்டுப் போகணுமேன்னும் யோசனையாக இருக்கு” தாத்தா கல்பனாவை மென்மையாகப் பார்த்துப் புன்னகைத்தபடியே சொன்னார். அவருக்குக் கல்பனா என்றால் கொள்ளைப் பிரியம்.


நானே நானா? - என். சுரேஷ்

எனதென்ற ஒன்றும் எனதல்ல என்ற நிஜம் தெளிவாய் என் முன்னே! ஞாபகங்களில் பல மகிழ்கின்றன சில கலங்கித் தவிக்கின்றன;


வெற்றிக்கு வழி - அத்தியாயம் 2 - செபரா

அறிவும், படிப்பும் மிக மதிப்பிட முடியாத பொருட்களாக இருக்கும் இந்த உலகத்தில், எப்பொழுதும் நாம் சொல்வதே சரியெனச் சொல்லும் எண்ணச் சுழலில் சிக்கிக் கொள்வது மிக எளிது. நீங்கள் கெட்டிக்காரராக, படித்தவராக இருக்கையில், சற்றே சிந்தித்துப் பாருங்கள்.


கண்ணீர் நொடிகள் - என். சுரேஷ்

சொந்த இனத்தின் அழிவைக் கண்டும் சட்டத்தால் வாய்ப்பூட்டிடப்பட்டு அமைதியின் வேடத்தில் தவமிருக்கும் வீரத்தின் எழுச்சி எரிமலை கண்ணீரால் துடிக்கும் நொடிகள்!


மகேஷும் கிரிக்கெட்டும் - என். சுரேஷ்

எல்லோரும் ஓடி விட்டார்களே... நீ மட்டும் ஏன் வந்தாய். நான் உன்னை திட்டுவேன் என்ற பயம் உனக்கு வரவைல்லையா என்ற கேள்விக்கு... அங்கிள்.. தவறு செய்த நான் உங்களின் எந்த தண்டனை வாங்கவும் தயாராகத் தான் வந்தேன், என்று மகேஷ் சாந்தமாக பதில் சொன்னான்,


சிந்தனை செய் மனமே - என். சுரேஷ்

யாரையும் காயப்படுத்தாத மனதில் யாரிடமும் கோபமில்லை, யாராலும் கவலையுமில்லை!

மழலைகள்.காம் தமிழ்ப் புத்தாண்டு மலர்

மழலைகள்.காம்

குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், புகைப்படங்கள், கதைகள், கவிதைகள், பாடல்கள், இசை, பொது அறிவு, க்விஸ், புதிர்கள், போட்டிகள், கணினியில் தமிழ் படைக்கும் வழிகாட்டி, கட்டுரைகள், ஆன்மீகம்


வெற்றிக்கு வழி - செபரா
வெற்றி என்பது, செல்வத்தைச் சேர்ப்பது மட்டுமல்ல. நீங்கள் விழைந்ததனைப் பிறர் செய்யுமாறு செய்வதும் வெற்றியே. பிறர் உங்கள் தலைமையினை விரும்பி ஏற்றுக் கொள்வதும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் கூட (நல்லது பொல்லாதது குறித்து) உங்கள் கருத்தினை விரும்பிக் கேட்க விழைவதுமாகும்.

Prizes Announcement- பரிசுகள் அறிவிப்பு

Please see the prizes being announced for the children who successfully participated in sketching and story telling contests that were conducted in the recent past.சமீபகாலத்தில் நடந்த ஓவியம் வரைதல் மற்றும் கதை சொல்லும் போட்டிகளில் வெற்றிகரமாகப் பங்குகொண்ட குழந்தைகளுக்கான பரிசுகள் அறிவிக்கப் படுகின்றன.


தமிழ்ப் புத்தாண்டு - இணையப் பாட்டி
இநத நன்னாளிலேதான் ஸ்ரீ பிரும்மன் சிருஷ்டியைப் படைக்க ஆரம்பித்தார். இந்தப் புத்தாண்டை இந்தியாவைத் தவிர சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, ஸ்ரீலங்கா போன்ற நாட்டு மக்களும் கொண்டாடுகின்றனர்.

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் - தாத்தா சீனு

பரிசுத்தமான உள்ளத்துடன் இறைவணக்கம் செய்யுங்கள். இந்த வையகத்தார் கனவு காண்பவைகளை விட மிகுதியான அற்புதங்களைப் பிரார்த்தனைகளால் சாதிக்க முடியும்


மைசூர் போகலாமா? - இணையப் பாட்டி
வரிசை வரிசையாகப் பல வரிகள் வைத்து சில பறவைகள்... V போன்று வடிவம் அமைத்து வெள்ளைப் பறவைகள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. கூடவே மூலிகைச்செடிகளின் வாசனை தென்றலில் கல்ந்து வருகிறது. எவ்வளவு நடந்தாலும் சோர்வு தெரிவதில்லை. பலவிதமான நாரைகள், கொக்குகள், அன்னங்கள், வெள்ளை கறுப்புக் கலந்த வாத்துகள், பலவிதமான மைனாக்கள், காதல் பறவைகள், குயில்கள், மண்கொத்திப் பறவைகள் முதலியன இங்கு வந்து இந்த இடத்தை மேலும் அழகு படுத்துகின்றன.


தகர டப்பா கார் - இணையப் பாட்டி
வெயில் கடுமையில் வெளியில் சுற்றாமல் வீட்டின் உள்ளேயே சமயத்தை விரயம் செய்யாமல் உபயோகிக்க வேண்டும். ஒரு வீட்டில் ஒரு விபத்தில் மாட்டிய கார் வீணாகத் தூசி படிந்து நின்றுகொண்டிருந்தது. அதை மிக்வும் துறுதுறுப்பான ராமு என்ன செய்தான்? கீழே கவிதை சொல்கிறது.


Gopala Krishnan - Artwork by mazalaiz kid
Enjoy the beautiful artwork by mazalais kid Vrishin Vigneshwar. See the output he has brought only with pencil.


புதையல் பெட்டகம் - அத்தியாயம் 3 - எஸ்.வி.என்
கடவுளர்கள் மட்டுமே பயன் படுத்திக் கொண்டிருக்கும் நெருப்பை மனிதனுக்குப் பரிசாகக் கொடுத்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது? அந்த எண்ணம் வந்தவுடன் அவன் உற்சாகமானான். ஆனால் கடவுளர்களிடமிருந்து எப்படி இந்த நெருப்பைப் பெறுவது?

புதிய கந்தரலங்காரம் - செபரா

இப்பாடலை இயற்றும் வரை நான் கந்தரலங்காரம் படித்ததில்லை. கந்த கோட்டம் சென்ற பொழுது, அங்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது. கந்தரலங்காரம் = கந்தனின் அலங்காரத்தைப் பாடும் நூல் என நான் எதிர்பார்த்தபடி அதில் கந்தனின் வடிவழகைப் பாடியாதாக எனக்குத் தோன்றவில்லை.


பெருமை வாய்ந்த பிள்ளையார்! - பகுதி 2 - கீதா சாம்பசிவம்
மரகத முனிவர்னு ஒரு முனிவர் இருந்தாராம். அவர் தவம் செய்வதற்குப் போன இடத்தில் விபுதைன்னு ஒரு அசுரப் பெண்மணி அவரைக் கல்யாணம் செய்துக்க ஆசைப் பட, முனிவர் மறுத்தும், பிடிவாதமாய்க் கல்யாணம் செய்து கொள்கிறாள். அவங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது,


உலகம் போற்றும் கலைஞர்கள் - ஆகிரா
ராஜா ரவிவர்மா. இவரது ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை. குறிப்பாகப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்படும் பெண்களை மிகத் துல்லியமாக புகைப்படம் போல் வடிப்பதில் இவர் வல்லவர். ஒரு அழகிய பெண்ணை வர்ணிக்கையில் ரவிவர்மாவின் சித்திரம்போல் இருக்கிறாள் என்று பலர் கூறுவதுண்டு.


MY DREAM - Rohith jayaraman
i want to be an astronaut! O PLUTO! can I see how far you have gone? O MERCURY! can I see you in life? - A poem by mazalais kid

Letter to friends abroad - Pooja

Here I wish to write something about India. Hope you all enjoy it. Just now I am in the 3rd Grade and will go to the 4th Grade in the coming acadamic year. Here are my thoughts about India.


ஸ்பாம்” (SPAM) எனும் சாபக்கேடு - பகுதி 4 - கணினி நிர்வாகம் - செபரா
நாம் “ஸ்பாம் (SPAM) - வேண்டாதது; நான் விரும்பிக் கேட்காத ஒரு செய்தி என எண்ணும் பொழுது, அதே செய்தி வேறு யாரேனும் ஒருவருக்கு அவராகக் கேட்காத பொழுதும், அவரது கணிணியில், மின்னஞ்சல் மூலம் வந்திருந்து, அதனால் அவரே எதிர்பார்க்காத நண்மை உண்டானால், அவருக்கு அது “ஸ்பாம்” இல்லை!!

Oh Little Flower - Net Granny

oh flower ! You are the model of innocence, You produce beautiful fragrance, You are the product of delicacy,


அனுபவம் - சுகந்தி
தாமஸ் நமக்குத் துன்பம் வரும் போது அதை ஒரு சோதனையாக எடுத்துக் கொள்ளவேண்டும். இப்படி துக்கத்தில் துவண்டு விடக் கூடாது. சோதனையில் பாடங்கள் படிப்பவனே புத்திசாலி. உனக்கு இன்று ஏற்பட்ட அனுபவங்கள் என்றாவது ஒரு நாள் நல்ல முறையில் உனக்குப் பயன்படும் பார்" என்று அவனைத் தேற்றி விளையாட அனுப்பினார் தாய்.


Holidays - Net Granny
Holidays can be used to improve one's health, improve general knowledge and help doing some social services. According to Gandhiji, the students should go to the villages, teach the poor, imparting awareness about health and hygiene.


Excited King and wise Minister - V. Vrishin Vignesh The king was sitting on his huge throne. All his children were sitting by his side. They all had performed very well in the examinations recently conducted by their Guru.

நான் யார்? - இணையப் பாட்டி

பரிசுகள்: ஹிந்தி, தமிழ்ப் பேச்சுப் போட்டிகள், எழுத்துப் போட்டிகள் இவற்றில் முதல் பரிசுகள் பெற்றுள்ளேன். பாராட்டியவர்கள் திரு கி.வா. ஜகன்நாதன், திரு கி.ஆ.பே. விசுவநாதம், திரு நாடோடி, திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி, திருமதி ஆனந்தி ராமசந்திரன், திருமதி சுபஸ்ரீ


நாதன் நாமம் - செபரா
இதோ, ஒரு முருகன் பாடல். மனமொன்றி, மூலப்பாடல் வகையில் ஏற்றி, இறக்கி ஆரோக, அவரோகணத்துடன் பாட சிறப்பாக இருக்கும். எந்த வரி இரு முறை பாட வேண்டுமென்பது, அவரவர் கற்பனா சக்தியினைப் பொறுத்தது.

ஜுக் ஜுக் ரயில் - இணையப் பாட்டி

நிறையப் புத்தகங்கள் படிக்க வேண்டும். படிக்கும் புத்தகங்களும் நல்ல அறிவு வளர்க்கும் புத்த்கங்களாக் இருக்க வேண்டும். ஏதாவது விளையாட்டைத் தேர்ந்தெடுத்து அதில் தேர்ச்சி பெற முயல வேண்டும். கடவுள் வணக்கம் காலையிலும் மாலையிலும் இடம்பெற வேண்டும். ஏதாவது ஒரு கலை கற்கலாம். வண்ண வண்ண ஓவியங்கள் வரைந்து பலரும் காண மழலைகள் தளத்தில் வெளியிடலாம்.

மழலைகள் இதழ் 9

மழலைகள்.காம்

குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், புகைப்படங்கள், கதைகள், கவிதைகள், பாடல்கள், இசை, பொது அறிவு, க்விஸ், புதிர்கள், போட்டிகள், கட்டுரைகள், ஆன்மீகம், கணினியில் தமிழ் படைக்கும் வழிகாட்டி

அணிலே அணிலே - Squirrel
இளம் கலைஞன் மணிகண்டனின் கைத்திறமை மிளிர்வதை இவ்வோவியத்தில் காண்க

பரீக்ஷை பயம் - Exam Fear
பரீட்சைக்கு அரை மணி நேரம் முன்னதாகவே பள்ளிக்குப் போய் விடுங்கள். உங்கள் ஆழ்மனதில் நான் நன்கு பரீட்சை எழுதி வெற்றி பெறுவேன் என்று சொல்லிக் கொள்ளுங்கள். - இணையப் பாட்டி

மஹாகவி பாரதி கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. - 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை - தாத்தா சீனு

கடவுளுடன் ஓர் உரையாடல்!! ஹலோ! நான்தான் கடவுள் பேசறேன்! நீங்க என்னை கூப்பிட்டது காதிலே விழுந்தது. கூப்பிட்ட குரலுக்கு வரணுங்கறது என்னோட வழக்கம். அதான் உங்க கூட கொஞ்சம் பேசலாம்னு வந்தேன்! - செபரா

பகவத் கீதா ஸாரம்
பீஷ்மரின் சங்கநாதத்தைத் தொடர்ந்து மற்ற தலைவர்கள் உடனடியாகத் தங்கள் வசமுள்ள சங்கங்கள், பேரிகை, மத்தளம், கொம்பு முதலிய பல வாத்தியங்களை முழக்கினார்கள். அந்த சப்தம் ஆக்ரோஷமாக ஒலித்தது. - அசலம்

எல்லாப்புகழும் எங்கள் இறைவனுக்கே எல்லோர்க்கும் அருள்புரிவான் இறைவனின் திருநாமம்
சொல்லாது சுகமுண்டோ! சொந்தமவன் என்றுணர்வீர்!!
- சந்தக்கவி செபரா

எந்தையும் தாயும்
ஜோதிடம் பார்த்துத் தன் துன்பங்கள் விடியுமா? எனும் தனது கேள்விக்கு விடை தேடுவது அவருக்கு ஒரு வழக்கமாகிவிட்டது. அவரது துன்பங்கள் நீங்கினவோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது ஆனால் அதனால் இரு இளம் ஜோதிடர்கள் உருவானார்கள். - ஆகிரா

Mouseball - எலிபால்
பந்து விளையாடும் எலியைப் பார்த்திருக்கிறீர்களா? - வண்ண ஓவியம்: Artist: M. Deepshi, VI Standard

களிமண்

விநாயகரும் பிற கடவுளர்களும் என் மனதில் நிலைத்து நிற்பதுபோல் எனக்குப் பள்ளிப்பாடங்கள் மனதில் சரியாக நிற்கவில்லையே. - ஆகிரா

பெருமை வாய்ந்த பிள்ளையார்!

விநாயகர் தொந்தி பெரிசா இருக்கு பார்த்தீங்களா? இந்த மாதிரியான பெரிய தொந்திக்குள் உலகே அடக்கி இருக்கும். இந்த விநாயகர் தான் இந்த மண்ணால் ஆகிய பூமிக்கும், சுடர் விட்டுப் பிரகாசிக்கும் விண்ணான ஆகாயத்துக்கும், சகலத்துக்கும் நாயகன் - கீதா சாம்பசிவம்

எத்தனை கடவுளர்
இத்தனை கடவுள்களா நமக்கு? ஆச்சரியாமாய் இல்லை? நமக்கு மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள் என்று? சில பேருக்குச் சந்தேகம், சிலருக்குக் குழப்பம். - கீதா சாம்பசிவம்

To which country does this person belong?

பொது அறிவு வினா விடை - General knowledge Quiz -ஆகிரா

என் சின்ன பொம்மை
சாவி கொடுத்தால் நடக்கும் இது மணியடித்தால் தூங்கும் நாட்டியங்கள் ஆடுமிந்த நல்ல நல்ல பொம்மை
-ஜெயம்மா பாட்டி

வாழும் முறைமை
குழந்தைகளாகிய, மாணவ மாணவிகளாகிய உங்களுடய தர்மம் (Duty) என்ன? ஸாத்வீக உணவருந்தி, உடலையும் மனதையும் சுத்தமாக வைய்த்துக்கொண்டு ஞானத்தை வர்த்திப்பிக்க சிரமப்படவேண்டும். - அசலம்

கணினி நிர்வாகம்

ஸ்பாம் (SPAM) என்பது ஒரு வகையில் AIDS எனப்படும் ஆட்கொல்லி நோய் போன்றது. ஒழுக்கக் குறைவான உறவுகளால் AIDS ஏற்படுவது போல, சில தேவையில்லாத, நமக்கு முன்பின் தெரியாத தளங்களுக்குச் சென்று வருவதால் ஸ்பாம் (SPAM) தாக்குதலுக்கு நாம் ஆளாகக் கூடும்.

வாழ்வின் ரகசியம் - பாகம் 4

இந்த வாஸனா எனப்படும் சக்தியின் இயக்கத்தால் நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் சேர்க்கைத் தரம் அமைந்து அந்த ஆசைகள் நிறைவேறும் பொருட்டு குணங்களை நம்முள் உருவாக்குகிறது. - அசலம்

வாத்து வாத்தியார்
ஒன்றுபோல் தோன்றும் இரு படங்களிடையே உள்ள வித்தியாசங்களைக் கண்டு பிடியுங்கள் - Find the differences between two seemingly identical pictures

இருண்ட இரவு - A dark night

வண்ண ஓவியம் - Artwork, Artist V. Riddi Varshitaa, V standard

மழலைகள் இதழ் 8



மழலைகள்.காம்
இதழ் 8 இணையவானில் பவனி வருகிறது.

குழந்தைகள் வரைந்த ஓவியங்கள்     புகைப்படங்கள்     கதைகள்     கவிதைகள்     பாடல்கள்     இசை    பொது அறிவு    க்விஸ்    புதிர்கள்    கணினியில் தமிழ் படைக்கும் வழிகாட்டி

ராதா சமேதா க்ருஷ்ணா - Radhakrishna

வெறும் பென்சிலை வைத்துக்கொண்டு விந்தை ஓவியம் படைக்கிறான் ஒரு சிறுவன் - எங்கே நீங்களும் இதுபோல் வரையுங்களேன்...

யானை வந்தது யானை, எங்கே வந்தது யானை?

ஆறு குருடர்கள் யானையைப் பார்க்கச் சென்றார்களாம். ஒருவன் யானையின் வாலைத் தொட்டுப் பார்த்து.. - படப்புதிர்: ஆகிரா

வாழ்வின் ரகசியம் - பாகம் 3

அஹம் என்ற மூல விசாரமாகிய இயக்குனர் இந்த ஆசாபபாச அனுபவங்களை என்னுடையது என சொந்தம் கொண்டாடி, பற்றுதலில் மூழ்கிவிடுகிறார், எப்படி எட்டுக்கால் பூச்சி தன்னிலிருந்து வரும் ஒரு மெழுகினால் தன்னைச்சுற்றி ஒரு வலை (கூடு) கட்டி அதனுள் தன்னை பந்தனம் சைய்துகொள்கிறதோ அதேபோல்.. கட்டுரை: அசலம்

எந்தையும் தாயும் - மூன்றாம் அத்தியாயம்

காகிதத்தில் தென்னங்குச்சியை வைத்து ஒட்டி, அதில் நூலைக் கோர்த்து, அந்தப் பட்டத்துக்கு நீளமான வாலையும் ஒட்ட வைத்து, நுலைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிகையில் கழுதை ஒன்று... - கட்டுரை: ஆகிரா

ஸ்பாம் (SPAM) எனும் சாபக்கேடு - பகுதி 2

இது போன்ற நிகழ்ச்சிகளால் சட்ட ரீதியான பிரச்சினை ஏற்பட்டு, நமது கணிணி ஸ்பாம் கட்டுப்பாட்டுச் சேவையினரால் தடை செய்யப்பட்ட ஒன்றாக, இணைய தளத் தொடர்பு துண்டிக்கப்படும் வாய்ப்பும் அண்மைக் காலத்தே இருக்கின்ற காரணத்தால்... - கணினி நிர்வாகம்: செபரா

Oh Butterfly - வண்ணச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சியே

வண்ண வண்ணப் பூச்சி வண்ணத்துப் பூச்சி, எண்ணிறந்த நிறங்கள் கொண்டிருக்கும் பூச்சி - ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுமி கிருத்திகா வரைந்த ஓவியம்

கவியருவி - ஞானம்

அந்தப் பாலைநிலத்துப் பேரீச்ச மரம்கூட பலன் தராதிருக்கவோ? சீற்றத்துடன் இன்று நீ சீறிப் பாய்கின்றாய்.. - கவிதைகள்: நவீனகவி வெற்றி வளவன்

எத்தனை கோடி ஜன்மம் வேண்டுமானாலும். . . .

உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்திற்கு முழுமனதுடன் அர்ப்பணம் செய்தார். ஸரஸ்வதி தேவி அவர் வாக்கில் நிர்த்தனஞ் செய்ய ஆரம்பித்தாள். "வந்தேமாதரம்" என்ற சப்தம் அவரது ஹிருதயத்திலிருந்து முழுத் தொனியுடன் கிளம்பிற்று; தமிழ்நாடெங்கும் பரவிற்று. - பாரதியாரின் மனைவி செல்லம்மாவின் உரை: தாத்தா சீனு

Who is this young boy? - யாரிந்தப் பையன்

பொது அறிவு வினா விடை - Quiz: ஆகிரா

சிவாராத்தி மகிமை

ஒரு சமயம் தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைய, அதிலிருந்து மஹாலட்சுமி தோன்றினாள். பின்னர் அதிலிருந்து பல பொருட்கள் வந்து கொண்டிருந்தன. கடைசியில் மத்தாக இருந்த வாசுகி என்ற பாம்பு விஷம் கக்க அத்துடன் பாற்கடலின் நஞ்சும் சேர ஆலகால விஷம் ஆகி எல்லோரும் மயக்கமடைய ஆரம்பித்தனர் - கட்டுரைக்கதை: இணையப் பாட்டி

Wise Minister

"Oh! our beloved King, we have a great problem that we are unable to solve by ourselves and we plead for your help to solve the same" - பரிசு பெறும் கதை: ரோஹித் ஜெயராமன்

உலகம் போற்றும் அறிஞர்கள் - தாகூர்

இரவீந்திரர் தனது 8 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் அவைகளை பானுஷங்கோ (sun lion) என்ற புனைப்பெயரில் 1877ல் வெளியிட்டார். 16வது வயதில் சிறு கதைகளும், நாடகங்களும் எழுத ஆரம்பித்தார். - கட்டுரை: பார்வமணி

களிமண் - அத்தியாயம் - 6

தன் மனதுக்குப் பிடித்த தொழிலொன்றைக் கற்றுக்கொண்டு அதில் முன்னேறுவதே அவனது நோக்கமாக இருந்தது. - தொடர்கதை: ஆகிரா

பகவத் கீதா ஸாரம் - பாகம் 2

தர்மயுத்தம் துவங்குவதற்கு முன் இரண்டு பக்கங்களும் தாங்கள் தயார் என்றும் யுத்தம் துவங்கலாம் என்றும் தெரிவிப்பதற்காக சங்கநாதம் முழக்குவது என்ற நியதிக்கேற்ப பீஷ்மர் சங்கை ஊதினார். கண்ணன் உரைத்த கீடதை - அசலம்

இறைவன் அருள்

அன்புடன் பிறரை ஆளும் அருளது வழங்கு என்றேன்!! இறைவன் இன்புற வழியறிந்தாய்! இனியுனக்கு வேதனையில்லை!! நண்பனாய்ப் பிறர்க்கு உழைக்க நாடுவது தானே வரும்!! மன்பதை போற்ற நாளும் மகிழ்ந்திங்கு வாழ்கவென்றான்!! - கவிதை: சந்ததக்கவி செபரா

மூளைக்கு வேலை கொடுங்கள்

50 கி.மீ வேகத்தில் பறக்கும் ஒரு பறவை வேகமாகப் போகும் வண்டி புறப்பட்ட இடத்திலிருந்து அதே நேரத்தில் புறப்பட்டு, எதிர் திசையில் வந்து கொண்டிருக்கும் வண்டியைச் சந்தித்து, மறுபடியும் திரும்பிப் பறந்து...
- புதிர்: பார்வமணி

நதி எங்கே போகிறது?

தேவைப் பட்டால் வீரமாகவும் நதியைப் போல் சுழல வேண்டும். மற்ற நேரத்தில் அதே நதியைப்போல் பணிவாக, தெளிவாக, சாந்தமாக இருக்க வேண்டும்.
- இணையப் பாட்டியின் கட்டுரைக்கவிதை

Elephant - யானை வரும் பின்னே

மணியோசை வரும் முன்னே


ஒன்றாம் வகுப்பில் பயிலும் குழந்தை கிருத்திகா வரைந்த யானையின் ஓவியம்